நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் எதுவுமில்லை – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!
Friday, March 25th, 2022நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காணப்பட்டாலும் உணவு பாதுகாப்பு தொடர்பில் எந்த சிக்கலும் கிடையாதென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரிசி, மரக்கறி உள்ளிட்ட பொருட்கள் போதியளவு நாட்டில் தற்போது உள்ளதாகவும் அவற்றை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்கும் பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சபையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் புதுவருட பண்டிகைக் காலங்களில் அரசாங்கத்தின் கைவசமுள்ள அரிசியை சந்தைக்கு விடுவித்து மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
செம்மணியில் மனித எலும்புகள் - மீண்டும் சூடுபிடிக்கிறது செம்மணி விவகாரம்!
போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|