இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த எமிரேட்ஸுடன் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து !

Thursday, May 4th, 2023

இலங்கையை, சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாக மேம்படுத்துவதற்காக எமிரேட்ஸுடன் உடன்படிக்கையொன்றை இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

துபாயில் இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் எமிரேட்ஸ் பிரதம வர்த்தக அதிகாரி அட்னான் காசிம் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது எமிரேட்ஸ் தனது உலகளாவிய வலையமைப்பின் ஊடாக இலங்கையை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறுகையில், அழகிய கடற்கரைகள், பசுமையான மழைக்காடுகள் மற்றும் வளமான கலாசாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

2019 இல் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளில் இருந்து நாடு மீண்டு வருகிறது. மேலும் சுற்றுலாத் துறை மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

எமிரேட்ஸ் உடனான கூட்டாண்மை, சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது மேலும் இது வரும் ஆண்டுகளில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிமை குறிப்பிடத்தக்கது.

Related posts: