நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு!

Wednesday, October 4th, 2023

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தான் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை நாடாளுமன்றத்தின் ஊடாக பொதுமக்கள் எதிர்க்கும் இந்த தருணத்தில் பொதுவான கட்டமைப்பின் கீழ் அனைவரும் பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: