சாதாரணதரப் பரீட்சை: சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
Wednesday, December 6th, 2017
ஜி.சி.ஈ.சாதாரணதரப் பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித நேற்றுத் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையின் காரணமாகப் பரீட்சைக்கு எந்தவித தடைகளும் ஏற்படாது எனவும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் சேதமடைந்திருந்தால் புதிய அனுமதி அட்டைகள் வழங்கப்படும் எனவும் இன்று நள்ளிரவு முதல் மீட்டல் மற்றும் தனியார் வகுப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
Related posts:
உலகின் கடல்சார் பயிற்சியில் இலங்கை!
வாகன சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
இந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில் - சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
|
|
|


