நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை!
Saturday, October 16th, 2021நாட்டில் இன்று (16) மத்திய, சப்ரகமுவ வட மேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறே வட மாகாணத்தில் இன்று (16) காலை சிறியளவில் மழைப்பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் அதேவேளை, மத்திய மழைநாட்டின் மேற்கு சரிவிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0000
Related posts:
கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 23 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ...
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக்கோவை இலக்கம்!
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும் - தகவல்களை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ...
|
|