நாடாளுமன்றில் இன்று பிடல் கஸ்ரோவுக்கு அனுதாபப் பிரேரணை!

Thursday, December 1st, 2016

கியூபாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோவுக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, அனுதாபப் பிரேரணை கொண்டுவரப்படும்.

அனுதாப பிரேரணையை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கொண்டுவருவார். அந்த அனுதாப பிரேரணை, இன்று மாலை 5 மணிமுதல் 7 மணி வரையிலும் இடம்பெறும்.

இதேவேளை, பிடல் கஸ்ட்ரோவின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்ப்பில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

8.2-720x480

Related posts: