சிறுநீரக மோசடி தலைமறைவான ஐவர் இந்தியர்கள் கைது!
Friday, November 11th, 2016சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு மிரிஹானே தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இந்திய மீனவர்கள் கடந்த புதன்கிழமை தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தப்பிச்சென்றவர்களில் ஐவர் மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேசாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தியா நோக்கி புறப்பட தயாராக இருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படவுள்ளதுடன், பேசாலை பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
வாக்காளர் பெயர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள்!
நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி – வாநிலை அவதான நிலையம்!
எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோம் ௲ இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஐ.நாவை தலையிட வேண்டாம் ...
|
|