இ.தொ.காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைவு!

Saturday, August 1st, 2020

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி காலமானார்.

95ஆவது வயதில் இன்று (1) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

மறைந்த எம்.எஸ் செல்லசாமி மூத்த வயது காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த எஸ்.செல்லசாமி 1926-12-11ஆம் திகதி தலவாக்கலை-மடகும்புற தோட்டத்தில் சுந்தரலிங்கம் அன்னப்பூரணிக்கு மகனாக பிறந்தார்.

ஹட்டன்- சென்.பொஸ்கோ பாடசாலையில் தமது ஆரம்ப கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

சமூக சேவைகளிலும், பொதுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

42 வருடம் அரசியல் அனுபவம் பெற்ற இவர் 1988ஆம் ஆண்டு மாவட்ட சபை ஊடாக அரசியலுக்கு பிரவேசித்துள்ளார்.

1990 மாகாண சபை,1991 பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்த இவர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவி, கைத்தொழில் விஞ்ஞான அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பட்டு நூல் அபிவிருத்தியின் தலைவராக இருந்த இவர் பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபையின் ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (03) இல-50D புளட்ஸ் லேன், கொழும்பு 7 என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து மாலை 3 மணியளவில் பொரளை இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

Related posts: