இந்தோனேசிய கடற்படைக் கப்பல் இலங்கை துறைமுகத்தில்!

Monday, February 20th, 2017

இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா – 367’ இலங்கைக்கு நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நேற்று வந்த இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

எதிர்வரும் 22ம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் கடற்படைவீரர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளனர்.

1395747624indonesia-20140325-1

Related posts: