நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்!

Friday, December 7th, 2018

நாடாளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று(07) நான்காவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்றைய தினமும் மீண்டும் விசாரிப்பதற்கும், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நாளைய தினம் வரை தடை உத்தரவை நீடித்தும் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts:

யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் நிலையில் கொரோனா தொற்று - அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமத...
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு - 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு பெப்ரவரி 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுதந்திரதின க...