நாடாளுமன்றத்தை செயலிழக்கச் செய்ய சிலர் முயற்சி – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!
Monday, March 13th, 2017
நாடாளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்..
ஹொரண அங்குவாதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் இந்த கருத்தை வேளியிட்டார். அவ்வாறான தரப்பினருக்கு எதிராக நாட்டு மக்கள் கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டில் ஜனநாயகம் நிலைகுழைந்து செல்வதாக அம்பலன்கொடயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊழல் மோசடி தொடர்பாக எந்தவொரு தரப்பினருக்கும் தராதரம் பாராது செயற்படுகின்றமையானது முறி பிரச்சினையின் போது ஜனாதிபதியின் பங்களிப்பின் ஊடாக தெரியவருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
26 ஆம் திகதிய கூட்டத்தின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும...
வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!
இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவி...
|
|
|


