நாடாளுமன்றத்தை செயலிழக்கச் செய்ய சிலர் முயற்சி – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!
Monday, March 13th, 2017நாடாளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்..
ஹொரண அங்குவாதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் இந்த கருத்தை வேளியிட்டார். அவ்வாறான தரப்பினருக்கு எதிராக நாட்டு மக்கள் கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டில் ஜனநாயகம் நிலைகுழைந்து செல்வதாக அம்பலன்கொடயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஊழல் மோசடி தொடர்பாக எந்தவொரு தரப்பினருக்கும் தராதரம் பாராது செயற்படுகின்றமையானது முறி பிரச்சினையின் போது ஜனாதிபதியின் பங்களிப்பின் ஊடாக தெரியவருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் மாவட்டப் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க ஊழியர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன
வைத்தியசாலை நிலத்திற்கு பதித்த மாபிள்கள் உடைவு - வைத்திய அறிக்கை பெறச்செல்வோர் சிரமம்!
500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை - முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன - பிரா...
|
|