நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு : பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள்!
பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக பாதுகாப்பற்ற புகையிரத கடவை சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.பி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் கோரியுள்ள 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்று தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத காரணத்தினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.பி.பிரேமலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு அண்மையில் வசிப்போர் மற்றும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை கடந்து செல்கின்ற சாரதிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
![]()
Related posts:
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா கைது!
மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் - உயர்தர மாணவர்களு...
|
|
|


