நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
Friday, January 14th, 2022
நயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை வளர்ப்போர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பலமுறை நயினாதீவு உப பொலிஸ் பிரிவில் முறையிட்டும் எந்த நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுமார் 5 கிலோ கிராம் நிறையுடைய மாட்டிறைச்சியுடன் நேற்றையதினம் வியாழக்கிழமை ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தும் எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மண்ணின் புனிதத்தை பேணுவதுடன், கால்நடை வளப்பாளர் மேல் கரிசனை காட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐம்பது தொன் பேரீச்சம் ஈச்சம் பழங்கள் சவுதி அரேபியாவால் இலங்கைக்க அன்பளிப்பு!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் - சிறுவர் தொடர்பிலான் பல்வேறு பிரச்ச...
சமூக சீரழிவின் மையமாக உருவெடுக்கும் மண்டைதீவு சுற்றுலாத்தளம் - உடன் நடவடிக்கை வேண்டும் என அனுசியா வல...
|
|
|


