நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

Wednesday, April 4th, 2018

இன்றையதினம் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அமைச்சர் ஏ எச் எம் பௌசி வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காது தவிர்த்துக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.

இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.

எனினும் அதனை மறுத்துள்ள லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக அதாவது பிரதமருக்கு எதிராக வாக்களிப்பதற்கான தீர்மானமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: