ஆழ்கடலில் மீன்பிடி படகுகளுக்கு ட்ரான்ஸ்போன்டர் வசதிகள் – கடற்றொழில் அமைச்சு!
Wednesday, April 26th, 2017
ஆழ்கடலில் மீன்பிடிக்கும் படகுகளை தரையிலிருந்து கண்காணிக்கக்கூடிய ட்ரான்ஸ்போன்டர் என்ற உபகரணத்தை மீனவர்களுக்கு வழங்க கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் உரிய படகுகள் பயணிக்கும் இடங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சர்வதேச சமுத்திரவியல் சட்டத்திற்கு அமைய சகல படகுகளிலும் இதனை பொருத்துவது அவசியமாகும். இந்த உபகரணத்தை பொருத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
Related posts:
அறிமுகமாகிறது புதிய வகை வாகனம்!
தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
ஓய்வு பெற்ற மலிங்கவிற்கு வாழ்த்து கூறினார் மகிந்த!
|
|