நடுத்தர வருமானம் பெருவோருக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிக்க அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை!

Thursday, June 11th, 2020

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீட்டு நிர்மாணப் பணியில் கவனம் செலுத்துமாறு அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

மேலும் பாரம்பரிய முறைமைகளில் இருந்து விலகி அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிலைக்கு மாற்றுவதற்கு தேவையான திட்டங்களை விரைவாக தயாரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 05 வருட இறுதியில் நிறுவனத்தை பொறுப்பேற்ற போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை பற்றி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அடுத்த வருடத்தில் அடையவேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தாபனத்திற்கு பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அரச நிறுவனங்களிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் உரிய முறையில் கிடைக்காத காரணத்தினால் எழுந்துள்ள பிரச்சினைகளும் ஜனாதிபதியின் கவனத்திற்கு இதன்போது கொண்டுசெல்லப்பட்டது.

அது குறித்து உண்மைகளை கண்டறிந்து பணத்தை அறவிடுவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாக ஒருபோதும் மாற்றப்படமாட்டாது - படையினரை தங்க வைக்கவே சில பாடசா...
உக்ரைன் நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள இலங்கை தயார் - வெளிவிவகா...
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிர்வாண நிலையில் ஆணின் சடலம் - சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 6 பே...