நடத்துனர்களின்றி பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க யோசனை முன்வைப்பு – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்!
Friday, October 22nd, 2021பேருந்து நடத்துனர் அல்லது சாரதி உதவியாளர்களின்றி பயணிகள் போக்குவரத்திற்காகப் பேருந்துகளைப் பயன்படுத்தக்கூடிய வகையில் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தைத் திருத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு யோசனை முன்வைத்துள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 காரணமாகப் பேருந்து தொழில்துறையின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதோடு பணியாளர்களின் வெற்றிடம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீரற்ற காலநிலை: 11 மாவட்டங்களைச் சேர்ந்த 5600 பேர் பாதிப்பு!
மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் தொடர்பில் கருத்துரைப்பதில...
மொடர்னா, பைசரை விட சினோபார்ம், ஸ்புட்னிக் வீ, அஸ்ட்ராசெனக்கா செயற்திறன் கூடியவை - இலங்கையின் சிரேஸ்ட...
|
|