20 ஆயிரம் கிலோ வெல்லத்தை உற்பத்தி செய்ய பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை!
Saturday, June 23rd, 2018பனை அபிவிருத்திச் சபையால் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட இருபது ஆயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்ய சபையின் அபிவிருத்தி பிரிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தற்போது சபையில் உற்பத்தி நிலையங்களில் இருந்து பத்தாயிரம் கிலோ வரையிலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை சிங்கராயர் நகர் மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களில் உற்பத்தி நிலையங்கள் ஊடாக கூடுதலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டும் வருகின்றது. சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை வெல்லத்தை இம்முறையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பனை வெல்லத்திற்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
Related posts:
உரமானியத்தை மாத்திரம் வழங்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் :ஏப்ரல் 20வரை பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சர் !
எதிர்வரும் 30 ஆம் திகதி மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்க...
|
|