அடுத்தவாரம்முதல் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போன்று செயற்படும் – பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் செயலாளர் நம்பிக்கை!

Wednesday, July 7th, 2021

அடுத்த வாரம்முதல் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமை போன்று மீணடும் செயற்படத் தொடங்குமென எதிர்பார்ப்பதாக பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசி செயல்முறை மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், அரசசேவை அடுத்த வாரம்முதல் வழமை போன்று மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், மே 10 ஆம் திகதியன்று அன்று வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி அரசு ஊழியர்கள் தற்போதும் செயல்பட வேண்டும், என்றும் அவர் வல்யுறுத்தியுள்ளார். அதன்படி, பொது நிறுவனங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மட்டுமே அழைக்க நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தின் செயலாளர் அறிவிப்பு வரும்வரை இந்த சுற்றறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: