தொலைபேசி கட்டணம் 17 சதவீதத்தால் அதிகரிக்கும்?

Monday, April 25th, 2016
நாட்டின் புதிய வற் வரி மீளாய்வின் காரணமாக தொலைபேசிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுவந்த 25 சதவிகித வரி 42 சத வீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைபேசிகளுக்கு தற்சமயம் அறவிடப்படும் தொலைத்தொடர்பு வரியான 25 சதவீதம் எதிர்வரும் மே மாதம் முதல் மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதுடன் மேலும் இரண்டு சதவீதம் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியாகவும் அறவிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சகல வகையான தொலைபேசிகள், வீட்டுத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் இந்தப் புதிய வரிக்கு உட்படுத்தப்படும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: