தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறையில் சிக்கல் – பயணிகள் குற்றச்சாட்டு!.
Saturday, March 16th, 2024தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
சாதாரண பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக இலங்கை ரயில்வே சமீபத்தில் முதல் இணையவழி டிக்கெட் மற்றும் இணையவழி ரயில் ஆசன முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, இணையவழி முறையில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டாலும், ஆசன முன்பதிவு செய்ய ரயில் நிலையத்திற்கு வந்த பின்,சில பயணிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை!
மே தின கூட்டங்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானம் - இராணுவ தளபதி அறிவிப்பு!
இ.போ.ச ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் மேலதிக நேர கொடுப்பனவாக 2,508 மில்லியன் ரூபா - தேசிய கணக...
|
|