தொற்றுநோய்: ஒரு மாதத்தில் 02 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Monday, November 26th, 2018உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் காரணமாக 2,138 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வாரத்தில் 6 லட்சத்து 4 ஆயிரத்து 282 மக்கள் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளானதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தொற்றுநோய்களுக்கு இலக்கானவர்கள் 2 லட்சத்து 84 ஆயிரத்து 539 பேர். இவர்களில் பலியான 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களில் பெரும்பாலானவர்கள் வைரல் ஹெப்படிட்டிஸ், காசநோய், சிபிலிஸ் மற்றும் கொனேரியா எனப்படும் பால்வினை நோய்த்தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பஸ்கள் சேவையில்!
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தேசிய அபிவிருத்தி ஊடக மத்தி...
இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் – நாளைமறுதினம் பத...
|
|