தொற்றா நோய்களிலிருந்து அரச ஊழியரை காக்க நடவடிக்கை!
Thursday, January 5th, 2017இலங்கையிலுள்ள சுமார் 14இலட்சம் அரச ஊழியர்களை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்க புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீரிழிவு, புற்றுநோய், இருதயநோய், உயர் குருதி அமுக்கம் உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய்களிலிருந்து அரச ஊழியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தினவின் ஆலோசனையின் பேரில் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் மருத்துவர் ஜயசுந்தரப பண்டார தெரிவித்திருக்கிறார்.
இந்தத்திட்டத்திற்கு முதற்கட்டத்தில் சுகாதார அமைச்சைச் சேர்ந்த சுமார் 1இலட்சத்து 40ஆயிரம் ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
Related posts:
உணவு உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்!
இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது - நுகர்வோர் பாது...
|
|