தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு –
Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுமாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரையில் நாட்டின் 14 மாவட்டங்களில் 6 காவல்துறை பிரிவுகளும், 98 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, திருகோணமலை பிரதேச செயலாளருக்கும், மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, திருகோணமலை மாவட்ட செயலாளரும் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு !
அத்து மீறி மீன்பிடிக்க நுழைந்த 13 இந்திய மீனவர்கள் அதிகாலை வேளைகடற்படையினரால் கைது - காயமடைந்த நிலைய...
உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!
|
|
|


