தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு –

Wednesday, May 5th, 2021

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுமாயின் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதா சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நாட்டின் 14 மாவட்டங்களில் 6 காவல்துறை பிரிவுகளும், 98 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை பிரதேச செயலாளருக்கும், மாவட்ட செயலகத்தின் நிர்வாக அதிகாரி ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, திருகோணமலை மாவட்ட செயலாளரும் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: