தொடர் மழை – சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
Sunday, December 17th, 2023
தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் (வைரஸ்) பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
முறையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையிலிருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் – பிரித்தானியா!
இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை!
காயங்களை ஆற்றுவதன் ஊடாக எதிர்காலத்தை வென்றெடுப்போம் - தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்!
|
|
|


