கொரோனாவை கட்டுப்படுத்த உழைத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Sunday, May 10th, 2020கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் நாளை தொடக்கம் பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் –
மேலும் – குறித்த வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தும் நாடுகள் வரிசையில் இலங்கையும் காணப்படுவதாகவும் இதற்காக பாடுபட்ட வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை பிரிவினர்கள், முப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பங்களிப்புகள் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தேவையேற்படின் சில பகுதிகளை முடக்கவும் சில காவற்துறை பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் முடியுமென பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|