தேர்தல் பிரசாரங்களுக்கு தனியார் பேருந்து வழங்கப்பட்டாலும், ஸ்டிக்கர்கள் ஒட்ட அனுமதிக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!

Monday, March 18th, 2024

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்காக தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டாலும், பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் அல்லது சுவரொட்டிகள் ஒட்ட அனுமதிக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகள் , அதன் முழுப்பொறுப்பை ஏற்க வேண்டுமென அவர் ஊடங்களுக்கு அறியத்தந்துள்ளார்.

பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டுவதால் அதன் பெயிண்ட் மற்றும் உலோகம் சேதமடையும். முந்தைய தேர்தல்களின் போது எங்கள் பேருந்துகள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், அரகலய காலத்தில் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் இன்னும் சரி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: