தேர்தலை பழைய முறையில் நடத்தவும் சிக்கல் – தேர்தல் ஆணையாளர் !

மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவதென இதுவரையில் தீர்மானம் இல்லை. பழைய முறையில் நடத்துவதாக இருந்தாலும் புதிதாகச் சட்ட வரைபு ஒன்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது. புதிய சட்டவரைபு ஒன்றினால் பழைய முறைமையை மீண்டும் சட்டமாக்கினால் மட்டுமே அது முடியும். புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைமுறையில் இருந்து வந்த பழைய தேர்தல் முறைமை தொடர்பான 1988 ஆம் இலக்க 2 ஆம் பிரிவு நீக்கப்படுகின்றது.
இதனால் மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதிலும் சிக்கல் காணப்படுகின்றது. புதிய முறையில் நடத்துவதானால் எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
Related posts:
புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு - ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்பார்ப்பவர்களின் அபிலா...
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் - கல்வி அமைச்சு அ...
புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்ப...
|
|