புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பம் – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, February 14th, 2024நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற நிலையில், புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில், அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரசியல் கைதிகள் இல்லை – அமைச்சர் தலதா!
இலங்கைப் பயணத்தை பிற்போட்ட ஜேர்மன் ஜனாதிபதி?
உலக வங்கியின் முக்கியஸ்தர் நாளை இலங்கை வருருகை!
|
|