தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி!

Saturday, January 26th, 2019

கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி 4 மில்லியன் கிலோவால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

2017ஆம் ஆண்டில் 307 மில்லியன் கிலோ மொத்த தேயிலை உற்பத்தியாக பதிவாகியிருந்தது. ஆனால் கடந்த வருடத்தில் மொத்த தேயிலை உற்பத்தி 303 மில்லியன் கிலோவாக அமைந்தது.

குறித்த வீழ்ச்சிக்கு இயற்கை அனர்த்தங்களும் மனித நெருக்கடிகளுமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் பற்றிய கொள்கை மாற்றங்கள், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், அடைமழை போன்றவை பிரதான காரணங்களாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: