தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு !

Friday, March 19th, 2021

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவதற்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை,  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப் பொருளியல் மற்றும் சித்திரப் பாடங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் குறித்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விண்ணப்பதாரர்கள் www.applications.donets.lk/exam என்ற வலைத்தளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கமுடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: