தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு!
Sunday, October 11th, 2020
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின், சமூக சேவை நடவடிக்கைகள், பட்டப்படிப்புக்கான பயிற்சி நெறிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி அத்தனாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்!
'பீல்ட் மார்ஷல்' பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது - பாதுகாப்பு இ...
'ஒரே கிராமம் ஒரே நாடு' - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் வவுவனியாவில் கலந்துரையாடல்!
|
|
|


