தேங்காய் விழுந்து ஒருவர் பலி – அராலியில் சம்பவம்!

Thursday, January 19th, 2023

யாழில் தென்னை மரத்தின் கீழ் படுத்து ஓய்வெடுத்தவரின் மீது தேங்காய் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜானன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சாரதியான இவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

இதன் போது அவரின் நெஞ்சுப் பகுதி மீது தேங்காய் விழுந்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் வழியிலேயே உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்தவரின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றிரந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: