தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!
Tuesday, September 29th, 2020செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் இடம்பெற்ற தேங்காய் ஏலத்தில், தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்போது ஆயிரம் தேங்காய்களுக்காக 61 ஆயிரம் ரூபாய் என்ற அதிகப்பட்ச விலையும் 51,500 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையும் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி குறித்த தேங்காய் ஏலத்தில் பெறப்பட்ட சராசரி விலை 56.49 ரூபாவாகும். இதன்போது குறித்த ஏலத்தில் விடப்பட்டிருந்த 707,000 தேங்காய்களில் சுமார் 29,000 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இவ்வாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நாட்டின் தேங்காய் உற்பத்தியானது 13.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊனமுற்ற இராணுவத்தினருக்காக தற்போது மாதாந்தம் 65,000 ரூபா வரை செலவு!
அரச சிறுவர் நாடக விழாவுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு - நீ...
|
|