துறைமுக ஒப்பந்தத்தினைத் திருத்த முடியும் – மகிந்த சமரசிங்க
Monday, July 31st, 2017ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடா்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தினைத் தேவைப்படின் திருத்த முடியும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஹிக்கடுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்த உடன்படிக்கை மூலம் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினாலும் ஒப்பந்தத்தின் 50 வது பக்கத்தில் உள்ள பந்திக்கு அமைய இந்த ஒப்பந்தத்தினைத் தேவைக்கு அமைய திருத்த முடியும்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த பந்தி சேர்க்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் இலங்கையில் ஒரு அடி நிலம் கூட எந்த நாட்டுக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது” என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
குளிர் காலநிலை குறித்து குடும்ப சுகாதார பணியகம் விசேட கோரிக்கை!
வரும் இரண்டு வாரங்களும் ஆபத்தாவை - மக்களின் பொறுப்பற்ற செயலால் விஷேட பொறிமுறையூடாக கண்காணிப்பு – பாத...
இலங்கையிலும் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 9 மரணங்ளும் 491 பேருக்கு த...
|
|