தீர்க்கதரிசனமிக்க தலைமையைக் கொண்ட பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது – தோழர் ஸ்டாலின்!

Sunday, March 15th, 2020

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் சுயநலச் சிந்தனையாளர்களினால் தோல்வியடையச் செய்யப்பட்ட நிலையில் தீரக்கதரிசனமிக்க தலைமையைக் கொண்ட பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கின்றது. எனினும், எம்மோடு இணைந்து பயணிக்க கூடிய தரப்புக்களை இணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிழக்கு பிராந்திய அமைப்பாளரும் கடையின் ஊடகச் செயலாளருமான தோழர் ஸ்ராலின் கல்முனைப் பிரதேச மக்கள் பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார் .

Related posts: