தீப்பற்றிக் கொண்டது யாழ் பெரியபுலவு மாகாவித்தியாலயம்!

Sunday, February 5th, 2017
யாழ்ப்பாணம் பெரியபுலவு மகாவித்தியாலயத்தின் சிற்றுண்டிச் சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக பாடசாலையின் சாரணர் அலுவலகம் தீயிலெரிந்து நாசமாகியுள்து.
சற்றுமுன்னர் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் எனவும்  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மின் ஒழுக்கு காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எனவும் சாரணர் அலுவலகத்தில் இருந்து பெறுமதிமிக்க பல பொருட்கள் தீயில் எரிந்து முற்றாக அழிந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts:

பேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு- தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த!
கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!
திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவ...