திருமலை துறைமுகம் – புறாத்தீவை பொதுமக்கள் மீண்டும் பார்வையிடுவதற்கு அனுமதி!
Monday, August 21st, 2023திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறாத்தீவை பொதுமக்கள் மீண்டும் பார்வையிடுவதற்கான திட்டத்தை கடற்படை ஆரம்பித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்படையின் மத்திய பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெலி புறா தீவினை பார்வையிடுவதற்கான சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், குறைந்த கட்டணங்களுடன் தரமான சேவை வழங்கப்படுமென கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிரிய தாக்குதலை ரஷ்யா கண்டித்துள்ளது!
ஏப்ரல் 20இல் தினத்தில் பாடசலைகளை ஆரம்பிக்க முடியாது - அரசாங்கம் !
நடுநிலையாக செயற்படுங்கள் - ஊடக நிறுவனங்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கோரிக்கை!
|
|