திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து – டிப்பர் மோதி விபத்து: 26 பேர் காயம்!

Monday, January 10th, 2022

திருகோணமலை – மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், மூதூரிலிருந்து சேறுவில நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மூதூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:


மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது - உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் உரிமைகளை பறிக்கவ...
கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியது அரச நிதி பற்றியக் குழு!