திருகோணமலைமாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் பகிஷ்கரிப்பு!

Friday, June 2nd, 2017

மூதூர்பெரியவெளிபாடசாலையில் மாணவிகள் மூவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து திருகோணமலை மாவட்டப் பாடசாலை மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரித்துள்ளனர்.

குறித்தமாணவிகள் மூவரும் பாலியல் வன்புணர்விற்குஉட்படுத்தப்பட்டமைக்குஎதிர்ப்புத் தெரிவித்தேமாணவர்கள் தமது ஒன்றிணைந்த எதிர்ப்பை  வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாக இன்றையதினம் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளநிலையில் வெறிச்சோடிக் காணப்பட்டதாகவும், இருந்தபோதிலும் ஆசிரியர்கள் மட்டுமே சமூகமளித்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் நடைபெற்ற அறநெறி வகுப்புக்குச் சென்ற 10 வயதுக்குக் குறைந்த மாணவிகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதான செய்தி அனைத்துத் தரப்பினரையும் விசனம் கொள்ளச் செய்துள்ளது.

இதனிடையே இச்சம்பவத்தைக் கண்டித்துபலதரப்பட்டோரும் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் சம்பந்தமாகக் கூறப்படும் ஐந்துசந்தேகநபர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதிவரைவிளக்கமறியலில் வைக்குமாறுமூதூர் நீதிவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: