பலாலி விமானத் தளம் பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்தி செய்யப்படும் – பிரதமர்!

Thursday, January 5th, 2017

பலாலி விமானத்தளம், பிராந்திய விமானத்தளமாக அபிவிருத்திசெய்யப்படும். அது இலங்கைக்குள் மாத்திரமல்லாமல் தென்னிந்தியாவுக்கும் சேவைகளைமேற்கொள்ளும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு தமிழ் பேசும் வடக்கு பகுதியை தொடர்புபடுத்தும் வகையில் இந்தியா அதனை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்போது தமிழகத்துடனான தொடர்பு மேலும் அதிகரிக்கும் என்று அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை திருகோணமலை துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானியமுதலீடுகளின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை இந்த வருடத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது இதன்கீழ் இலங்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

palaly-ariport-660x330

Related posts: