யாழ்ப்பாணத்தில் மத்தியதர குடும்பங்களின் நலன் கருதி வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பித்து வைப்பு!
Wednesday, November 18th, 2020நாவற்குழி பகுதியில் மத்தியதர குடும்பங்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பநிகழ்வு வைபவம் இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
“சியபத்த வீடமைப்பு” எனும் கருப்பொருளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 100 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியாக இது அமையவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தை முன்நிட்டு குறித்த வீட்டுத்திட்டம் நாடு முழுவதும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதமர் பங்குபற்றலுடன் 31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்!
25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் 10 நாட்களில் நாட்டை வந்தடையும் - இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் - இருதரப...
|
|