திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவு தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டு!

Monday, January 15th, 2024

அதிக விலைக்கு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தினால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் எரிவாயு கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான புதிய கொள்வனவு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பில்லியன் டொலர்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 120 மில்லியன் டொலர் மானியம் பயன்படுத்தப்படவில்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: