தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த சகல ஊடக நிறுவனங்களும் இணைந்து கொள்ள வேண்டும் – கல்விமான்கள்!

Sunday, June 17th, 2018

சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் சென்றடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மாத்திரமன்றி சகல ஊடக நிறுவனங்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று கல்விமான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தவறான மற்றும் போலியான விடயங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் தகவல் உலக நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றன. எனவே பாரம்பரிய ஊடகங்கள் மர்திரமன்றி சமூக ஊடகங்களும் தகவல்களை சரியாக கையாள்வது அவசியம்.

இதற்கு சிறப்பான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கல்விமான்கள் சுட்டிக்காட்டினர்.

ஒருவர் இணையத்தில் தவறான தகவல்களை தரவேற்றுகையில் அந்த நபரை இனங்காணக்கூடிய தொழில்நுட்ப முறைகள் உள்ளதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்த தெரிவித்தார்.

 

Related posts:


ஊர்காவற்றுறை பிரதேச சிறுகைத்தொழில் தொடர்பில் துறைசார் அமைப்புகளுடன் தவிசாளர் ஜெயகாந்தன் ஆலோசனை!
முறையற்ற கொடுக்கல் வாங்கல் முறைகளின் தாக்கமே டொலர் நெருக்கடிக்கு காரணம்- மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக...
கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள் - சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம...