தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ஆயுர்வேத கூட்டுத்தாபனம் !

Thursday, September 15th, 2016

நாவின்ன ஆயுர்வேத கூட்டுத்தாபனம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஏற்பட்ட குழப்பநிலையே இதற்கு காரணம் எனத தெரியவந்துள்ளது.ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமையாளர் ஊழல்வாதிகள் எனவும் அவர்களை பதவி நீக்கிவிட்டு அந்த வெற்றிடங்களுக்கு வேறு நபர்களை நியமிக்குமாறும் கோரி ஊழியர்கள் அண்மைக் காலமாக போராடி வருகின்றனர்.

இதனால் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பணிக்கு சில நாட்களாக சமூகமளிக்காது பொலிஸ் பாதுகாப்புடன் அங்கு கடமைகளின் நிமித்தம் சென்றுள்ளார்.

இந்தநிலையில் அங்கு கூடிய ஊழியர்கள் போராட்டத்தை மேற்கொண்டதால் அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Sri-Lanka-health-ministry-415x260

Related posts: