உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வலியுறுத்து!

Saturday, August 6th, 2022

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்ததுடன் பொதுமக்களுக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பாக அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் பணிப்பாளருக்கும் இடையே நடந்த கலந்தரையாடலில், வைத்தியசாலை செயற்பாட்டு சுமூகமாக நடைபெறுவதற்கு சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையிலே வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வைத்திய சாலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனவும் கூறப்பட்டது.

அதனடிப்படையில் பொதுமக்களுக்கான ஆலோசனைகள்,அறிவுறுத்தல்கள் வருமாறு –

நோயாளர்களை பார்வையிடுவதற்கு பார்வையாளர் நேரத்தில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்., நோயாளருடன் விடுதிகளில் உதவிக்காக ஒருவர் மட்டுமே தங்கி நிற்க முடியும்., வைத்தியசாலை வளாகத்துக்குள் போதைப்பொருள் அல்லது மது பாவித்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கபடமாட்டார்கள்.

அத்துடன் விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களோ அல்லது உதவியாளர்களோ இரவு 7.30 மணிக்கு பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேற அனுமதிக்கபட மாட்டார்கள்.

இதேநேரம் விடுதிகளில் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடும் போது உதவியாளர்கள் விடுதியை விட்டு வெளியேறி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வைத்தியசாலைக்குள் வருபவர்கள் வைத்தியசாலை சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்

நோயாளரை பார்வையிடுவதற்கு குழுக்களாக வருகைதருபவர்கள் எக்காரணம கொண்டும் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வதற்கு பூரண ஒத்துளைப்பு வழங்க வேண்டும் – என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: