தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு மேலுமொரு சலுகை – போக்குவரத்து அமைச்சர் பவித்ரா நடவடிக்கை!
Thursday, October 14th, 2021தனியார் பேருந்து துறையை மீண்டும் ஊக்கப்படுத்துவதற்காக சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சலுகை பெக்கேஜ் ஒன்றை வழங்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் சேவையில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பேருந்து தொழிற்துறை சார்ந்த 6 தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வன்னியில் சிறுநீரக நோய்க்கான நிவாரண ஜனாதிபதி செயலணி இணைப்பு செயலகம்!
வாக்குறுதி எழுத்து மூலம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் -துறைமுக ஊழியர்!
கோரோனா வைரஸ் : யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் விசேட அறிவுரை!
|
|