தனியார் சுகாதார சேவை ஒழுங்குமுறை சட்டமூலத்தில் திருத்தம்!

Saturday, April 15th, 2017

தனியார் சுகாதார சேவைக்கான ஒழுங்குமுறை சபை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தை திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.

இதற்காக சுகாதாரப் பணிப்பாளரின் தலைமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஒருவர் மற்றும் சுகாதார அமைச்சின் சட்டப் பணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான அறிக்கையை ஒரு மாத காலத்திற்கு தயார் செய்து சுகாதார அமைச்சரிடம் கையளிக்க உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.  பிரித்தானிய அரசாங்கத்தினால் தயார் செய்யப்பட்டுள்ள தனியார் சுகாதார சேவைக்கான ஒழுங்குமுறை சபை அறிக்கையை கருத்திற் கொண்டு இந்த சட்டமூலத்தை சீரமைக்குமாறு சுகாதார அமைச்சரினால் அந்தக் குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: