தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது – 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!
Saturday, August 28th, 2021தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர்முதல் இதுவரை 60 ஆயிரத்து 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 641 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 128 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்களில் பயணித்த 901 பேரும் பொலிசாரால் சோதனையிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈ.பி.டி.பியின் முயற்சியால் நயினாதீவில் கடல் நீரை நன்நீராக்கும் குடிநீர் திட்டம் ஆரம்பம்!
மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படவில்லை: ஈ.பி.டி.பியால் நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!
தனியார் காணிகளை சுவீகரிக்க மாதகலில் முயற்சி – பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம்!
|
|