இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய இரண்டு ரூபா நாணயம்!
Thursday, February 25th, 2021இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைத்துள்ளார்.
இது இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு சுழற்சி நாணயம் ஆகும்.
இந்த நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நாணயம் மார்ச் 03 முதல் 05 மில்லியன் பெறுமதியான நாணயங்கள், நாட்டின் நாணய சுழற்ச்சியில் சேர்க்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
சுலைமான் கொலை தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளங் காணப்பட்டனர்!
காணாமற்போனவர்கள் தொடர்பில் இறப்பு பதிவுசெய்யும் கால எல்லை நீடிப்பு – முல்லைத்தீவு மாவட்ட காணிப்பதிவா...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து காணிகளையும் சேகரித்து உடனடியாக காணி வங்கியொன்றை தயார...
|
|